• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

50 லட்ச ரூபாய் பணத்துடன் நின்று கொண்டிருந்த திமுகவினர்..,

ByKalamegam Viswanathan

Apr 20, 2026

திருப்பரங்குன்றம் கோட்டை தெரு பகுதியில் ரூபாய் 50 லட்சம் பணத்துடன் நின்று கொண்டிருந்த திமுகவினரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை.

இது தொடர்பாக திருப்பரங்குன்றம் தவெக வேட்பாளர் சி டி ஆர் நிர்மல் குமாருக்கு தகவல் தெரிய வந்தவுடன் காவல் நிலையத்திற்கு வந்து குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என கூறுகின்றனர்.

மேலும் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ரூபாய் 5 லட்சம் பணம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு வருகிறார். திருப்பரங்குன்றத்தில் திமுக பணம் பட்டுவாடா தொடர்பாக தவெக வேட்பாளர் சி டி ஆர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார்அளித்துள்ளார்.