விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளை பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு சிவகாசி திமுக மாநகர செயலாளர் உதயசூரியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல் காளிராஜன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.








