விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கிருதுமால் ஆற்றங்கரையில் சங்க கால வடிகுழாயுடன் கூடிய உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நெடுகனேந்தல் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் கிருதுமால் நதியின் கிழக்கு கரையில் மேற்பரப்பை ஆய்வு செய்தனர். அப்போது சங்ககாலத்தை சேர்ந்த வடிகுழாயுடன் கூடிய உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த ஆய்வு குறித்து அவர்கள் கூறியதாவது, மக்கள் முதன் முதலில் நீர் நிலைகளின் அருகில் தான் குடியேறினார்கள். அதிலும் குறிப்பாக ஆற்றங்கரை பகுதிகளில் தான் குடியேறினார்கள். விவசாயத்திற்கும், கால்நடைகள் வளர்ப்பதற்க்கும் தண்ணீர் தேவை அதற்கு இந்த ஆறுகள் மிகவும் உதவியாக இருந்தன. அது போல் ஆற்றில் வரும் நீரை நேரடியாக குடி நீராக பயன் படுத்த முடியாது. அதற்காகத் தான் இந்த உறை கிணறும் , இந்த உறை கிணறுக்கு நீர் கொண்டு வர நீர் வடிகுழாயும் பயன்படுத்தப்பட்டன. நாங்கள் கண்டறிந்த உறை கிணறானது மிகவும் தொன்மையானது ஆகும். அந்த கிணற்றில் நீர் பாயும் விதமாக வடிவமைக்கப்பட்ட வடிகுழாய் மண் அரிப்பினால் தெளிவாக தென்பட்டது அதனருகில் ஏராளமான கருப்பு, மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகளும், அந்த பகுதியில் பரவிக் கிடக்கின்றன.
இங்கு காணப்பட்ட உறைகிணறு உறையின் உயரம் 1 1/2அடியும் அதன் தடிமன் 2 இன்ச் அளவிலும், இந்த உறையானது
மேற்பகுதி குவிந்தும் கீழ்ப்பகுதி சற்றே விரிந்தும் ஒவ்வொரு உறையும் அடுத்தடுத்து பொருந்தும் விதமாக வடிவமைத்துள்ளனர். தற்போது வெளியில் தெரியும் உறையின் எண்ணிக்கை 6 ஆகும் மேலும் இந்த உறை கிணற்றிற்கு நீர் சேமிக்கும் விதமாக நீர் வடிகுழாய் அமைப்பும் தென்பட்டது, இந்தக் குழாய்களின் எண்ணிக்கை 10 ஆகும் ஒவ்வொரு குழாயின் நீளம் 1 அடி இருக்கிறது ஒரு பகுதி குவிந்தும் மற்றொரு பகுதி சற்றே விரிந்தும் ஒன்றன்பின் ஒன்றாக பொருந்தும் விதமாக குழாய்களை வடிவமைத்துள்ளனர். இங்கு காணப்படும் உறைகிணறு வடிகுழாய், பானை ஓடுகளை பார்க்கும்போது சங்க கால மக்கள் தற்போதைய நரிக்குடி அருகே கிருதுமால் ஆற்றங்கரையில் ஒரு நாகரிக வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
மேலும் இந்த தொல்லியல் பொருட்கள் கிடைத்த இடத்தில் அரசு முறையான அகழாய்வு மேற்கொண்டால் பல புதிய தடயங்களை வெளிக்கொனர வாய்ப்பாக அமையும் என்று அவர்கள் கூறினர்.
இந்த ஆய்வில் அக்னீஸ்வரன்,யோக பிரகாஷ், தனுஷ்பாபு பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் தாமரைக்கண்ணன், மீனாட்சி சுந்தரம் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் ஆகியோர் பங்கேற்றனர்.

- மதுரையில் மருத்துவ சங்கங்கள் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!அரசாணை 225ஐ திரும்ப பெற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் ஆரம்ப […]
- திண்டுக்கல்லில் மருத்துவ சங்கம் ஆர்ப்பாட்டம்!விடியா தி மு க ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணி நேரத்தை ஒரு […]
- திண்டுக்கல்லில் திமுக பஞ்சாயத்து தலைவர் பொதுமக்களால் விரட்டி அடிப்பு!திண்டுக்கல் அருகே குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் விடாமல் தனியார் கம்பெனிக்கு தண்ணீர் கொடுக்க முயற்சி செய்த […]
- பழனியில் தரிசனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி..இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான […]
- ரம்மி ஆப்புகளை தடை செய்யக்கோரி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கோரிக்கைஇணையதளத்தில் உள்ள ஆன்லைன் ரம்மி ஆப்புகளை தமிழகஅரசு தடை செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் இடம் […]
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுக் கொள்கைத் […]
- விருதுநகர் சந்தையில் பருப்பு விலை உயர்வுகர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் சந்தையில் பருப்பு விலை […]
- எம்ஜிஆர் – ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் -ஓபிஎஸ்அதிமுகவை மாபெரும் இயக்கமாக மாற்றிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் என மதுரை விமான […]
- மாநிலங்களவை இன்றுடன் நிறைவுமாநிலங்களவை அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் […]
- பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் – அமைச்சர் பொன்முடிதமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் […]
- சமூக சேவகர் ஆர்.வி. மகேந்திரன் –க்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் …மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றயதற்காக மகேந்திரன் அவர்களுக்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. […]
- சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தேசியக்கொடி வழங்கிய அர்ஜூன் சம்பத்…சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் […]
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு சமூகநீதியை உண்மையாக […]
- கருணாநிதியின் கொள்கைகளை அவரது பேரன் உதயநிதி கைவிட்டுவிட்டார் – அண்ணாமலைகருணாநிதி கொள்கையை கைவிட்ட அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை கிண்டல் டுவிட்டர்தமிழக பா.ஜனதா தலைவர் […]
- மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள வித்தியாசமான நோய்… உரிமையாளர்கள் அதிர்ச்சி!ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மாடுகள் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை […]