ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் 16வது சீசனில் ஆர்சிபி – சிஎஸ்கே இடையேயான போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருத்துராஜ் கெய்வாட் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ரஹானே மற்றும் கான்வே இருவரும் ஆர்சிபி அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.
அதிரடியாக ஆடிய ரஹானே 20 பந்தில் 37 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் கான்வேவுடன் ஜோடி சேர்ந்த ஷிவம் துபேவும் அதிரடியாக ஆடினார். கான்வே மற்றும் துபே ஆகிய இருவரும் அடித்து ஆடி அரைசதம் அடித்தனர்.
டெவான் கான்வே 45 பந்தில் 83 ரன்களையும், துபே 27 பந்தில் 52 ரன்களையும் குவித்தனர். கான்வே, துபேவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 226 ரன்களை குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
227 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய பெங்களுர்ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 6 ரன்களுக்கும், மஹிபால் லோம்ரார் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். ஆனால் கேப்டனும் தொடக்க வீரருமான ஃபாஃப் டுப்ளெசிஸும், மேக்ஸ்வெல்லும் இணைந்து காட்டடி அடித்து இருவருமே அரைசதம் அடித்தனர்.
இதையடுத்து 3வது விக்கெட்டுக்கு டுப்ளெசிஸ் – மேக்ஸ்வெல் இணைந்து 126 ரன்களை குவித்தனர். பெங்களூருவில் சிக்ஸர் மழை பொழிந்த மேக்ஸ்வெல், 36 பந்தில் 8 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, டுப்ளெசிஸும் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக்கும் 14 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன் பின்னர் இம்பேக்ட் பிளேயராக இறங்கிய பிரபுதேசாய் 11 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் அடித்தாலும் கூட, ஆர்சிபி அணியால் 20 ஓவரில் 218 ரன்கள் தான் அடிக்க முடிந்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இந்த நிலையில், சென்னை போட்டி என்றாலே சினிமா பிரபலங்கள் கண்டிப்பாக வருவது உண்டு. இதுவே சென்னையில் போட்டி நடந்திருந்தால் சொல்லவே வேணாம், கோலிவுட் வட்டாரமே சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஒன்று கூடி விடுவார்கள். இது பெங்களூருவில் நடந்த போட்டி என்பதால், அங்கு நடிகர் தனுஷ் தான் நடிக்கும் கேப்டன் மில்லர் பட கெட்டப்பில் வந்துள்ளார். அப்போது அவருடன் கன்னட நடிகர் ஷிவராஜ் குமாரும் வந்திருந்தார். இருவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை பார்த்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]