வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து தென் கிழக்கில் 680 கி.மீ. தொலைவில் உள்ளது! மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!
நாளை தென் மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறி, வரும் 5 ஆம் தேதி நெல்லூர் – மசூலிப்பட்டிணத்திற்கு இடையே கரையை கடக்க உள்ளது.
டிசம்பர் 4ம் தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழையும், திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும்.