பங்குசந்தை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் முன்னாள் குழு இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி ஐகோர்ட்டு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதே போல ஆனந்த் சுப்பிர மணியனுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது.