அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை ‘டைம்’ கவர் பேஜில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினின் முகத்தில் ஹிட்லரின் மீசை, கண்களை இணைத்து வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் படங்கள் பரவுகிறது.
இது உண்மையா, பொய்யா என்ற முழுபின்னணி விபரம் தற்போது தெரியவந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் பிப்ரவரி 24 முதல் ராணுவ நடவடிக்கையை துவக்கினார். இன்று 6வது நாளாக ரஷ்ய ராணுவம் உக்ரைனை உக்கிரமாக தாக்கி வருகிறது.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கேட்டு கொண்டாலும் புதின் போரை கைவிடவில்லை. இதனால் இருதரப்புக்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. போர் தொடர்பாக ரஷ்யா-உக்ரைன் இடையே பொலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து போர் முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினை, ஜெர்மனியின் ஹிட்லருடன் ஒப்பிடும்படியான 2 படங்கள் டைம் பத்திரிகையின் கவர்பேஜில் வெளியிடப்படுகிறது என சமூக வலைதளங்களில் பரவியது. இதில் ஒரு படம் பிப்ரவரி 28 (நேற்று), இன்னொரு படம் மார்ச் 7 ல் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ஒன்றில் புதின் முகத்தில் ஹிட்லரின் மீசையும், இன்னொரு படத்தின் புதினின் கண்களுக்கு பதில் ஹிட்லரின் கண்களும் உள்ளது. இது வேகமாக பரவிய நிலையில் விவாதப்பொருளானது.
மேலும் டைம் பத்திரிகை அப்படி கவர்பேஜ் போட்டோவை வெளியிடவில்லை என்பது தெரியவந்தது. அதாவது டைம் பத்திரிகை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பிப்ரவரி 25 காலை 6.18 மணிக்கு ஒரு பதிவு செய்தது. அதில் பீரங்கி வண்டிகளில் ராணுவ வீரர்கள் இருக்க ‘வரலாறு திரும்புகிறது… ஐரோப்பாவின் கனவுகளை புதின் சிதைத்து எப்படி’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. இதை போட்டோஷாப்பில் எடிட் செய்தவர்கள், பீரங்கியுடன் ராணுவ வீரர்கள் இருப்பதற்கு பதில் புதினை ஹிட்லருடன் சேர்த்து சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஏராளமானவர்கள் அதை உண்மை என நினைத்து சமூக வலைதளங்களில் பரப்பியதும், தொடர்ந்து கமெண்ட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். இதில் வரலாறு திரும்புகிறது… பேசினால் மட்டும் போதாது செய்து காட்ட வேண்டும் என ஒவ்வொருவரும் தங்களது மனதில் உள்ள எண்ணங்களை கமெண்ட்டுகளில் கொட்டி தீர்க்கின்றனர். முன்னதாக, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினை, ஹிட்லரின் நாஜி படையுடன் ஒப்பிட்டு உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி பேசியிருந்ததார். அதாவது, ‘ரஷ்யா நாசி படையை போன்று உக்ரைனை தாக்குகிறது’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது போல இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாடிக்கொண்டிருந்த போது குரல் தழுதழுத்து அழுத காட்சி இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து பலரும் முதலை கண்ணீர் என்று விமர்சனம் செய்தனர். அதே போல அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் முதலை கண்ணீர் வடிக்கும் இந்திய பிரதமர் என்று செய்தி வந்ததாக பலராலும் பகிரப்பட்டது. பிறகு அதனை ஆய்வு செய்ததில் அது போன்ற செய்தியை புகைப்படத்தை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட வில்லை என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.





- திருப்பரங்குன்றத்தில் ஒரிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு மோட்ச தீபம்திருப்பரங்குன்றம் அருகே வராஹி அம்மன் கோவிலில் ஒரிசாவில் ரயில் விபத்தில் பலியானவர்களுக்குமோட்ச தீபம் ஏற்றப்பட்டதுமதுரை மாவட்டம் […]
- இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய்10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்;2019ம் ஆண்டில் […]
- திருப்பரங்குன்றம் உண்டியல் வருமானம் ரூ52 லட்சம் உட்பட தங்கம், வெள்ளி பொருட்கள் கிடைத்தனதிருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.52 லட்சம் தங்கம் 253 கிராம். வெள்ளி 2 கிலோ […]
- அடியாட்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த முயல்வதாக நில அளவையருடன் வாக்குவாதம்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை அடியாட்கள் மூலம் கையகப்படுத்த முயல்வதாக […]
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]