கொரோனா தொற்றால் அதிகம் தற்போது பாதிப்புக்குள் ஆவது அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், பிரபலங்கள் தான்.ஆனால் அதை சநாலாக ஏற்று அதிலிருந்து மீண்டும் வந்துள்ளனர்.
அன்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அரசியல் தலைவரான ஜி.கே.வாசன், நடிகை காஜோல் வரிசையில் தமிழ் திரைப்பட நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அவர் கூறுகையில், தனக்கு 2 நாட்கள் அறிகுறி இருந்ததாகவும், பரிசோதனையில் கொரோனா பாதித்துள்ளது தெரியவந்ததாகவும் கூறினார்.
மேலும், தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்துகொளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.