விதவிதமான சூப் வகைகளில் இரும்பு சத்து நிறைந்துள்ள இந்த முருங்கைக்கீரை ரொம்பவே சக்தி உள்ளதாக கருதப்படுகிறது. கீரைகளின் ராணியாக விளங்கும் இந்த முருங்கைக் கீரையை சூப் செய்து குடித்தால் உடலில் ரத்த சோகை நோய் இருப்பவர்களுக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நோய் தீரக்கூடிய சுலபமான வழியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி அளவிற்கு, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – இரண்டு, இடித்த பூண்டு பல் – நான்கு, அதே அளவிற்கு இஞ்சி இடித்தது, சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வர மிளகாய் – இரண்டு, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்.
செய்முறை விளக்கம்:
முருங்கைக் கீரை சூப் செய்வதற்கு முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் ஜீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் வர மிளகாய் இரண்டை கிள்ளி சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். இடித்த பூண்டு பல், அதே அளவிற்கு இடித்த இஞ்சி ஆகியவற்றை சரிசமமாக சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்கி விடுங்கள். இவற்றின் வாசம் லேசாக மாற ஆரம்பித்ததும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம், தக்காளி ஓரளவுக்கு நன்கு மசிய வதங்கி வரும் பொழுது ஒரு கைப்பிடி அளவிற்கு முருங்கைக் கீரையை நன்கு சுத்தம் செய்து இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். எண்ணெயுடன் ஓரளவுக்கு முருங்கைக் கீரை வெந்து வரும் போது மஞ்சள் தூள் போட்டு கலந்து விட வேண்டும்.

முருங்கைக்கீரை சிறிதளவு வெந்த பின்பு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள். கீரை வெந்து திக்கான சூப் போல ஆகியதும் ஒரு ஸ்பூன் அளவுக்கு மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு இந்த சூப்பை அப்படியே குடிக்கலாம் அல்லது வடிகட்டியும் நீங்கள் குடித்துக் கொள்ளலாம். உங்களுக்கு பிடித்து இருந்தால் இதை அப்படியே சாப்பிடுங்கள். இல்லை என்றால் வடிகட்டி சூப் மட்டும் குடித்து விட்டு, மீதம் இருக்கும் சக்கையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும் இந்த முருங்கைக்கீரை ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்தது!நீங்களும் இதை செய்து பாருங்க
- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]