நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான கருத்தை பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து அவர்கள் மீது பா.ஜனதா நடவடிக்கை எடுத்தது. நவீன்குமார் ஜிண்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நுபுர் சர்மா ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் தெரிவித்த கருத்துகளுக்காக மத்திய அரசுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர்சர்மா, ஜிண்டால் ஆகிய இருவரையும் கைது செய்ய கோரி நாடு முழுவதும் நேற்று முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி, ஜூம்மா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து கொண்டு வெளியே வந்தவர்கள் நுபுர்சர்மாவுக்கும், டெல்லி போலீசாருக்கும் எதிராக கோஷமிட்டனர். பெரும்பாலான மாநிலங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடந்தது. சில மாநிலங்களில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மெயின் ரோட்டில் ஏராளமானவர்கள் குவிந்து நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். அதிக அளவில் மக்கள் திரண்டதால் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டது இருந்தது. மேலும் அந்த பகுதியில் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ராஞ்சியில் பல இடங்களிலும் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்றவகளில் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் போலீசார் காயம் அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினார்கள். மேலும் போலீசார் துப்பாக்கியால் சுட்டும் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள். குண்டு காயம் அடைந்த 2 பேர் அங்குள்ள ராஜேந்திரா இன்ஸ்டிடியூட் மருத்துவ அறிவியல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் வழியிலேயே இறந்துவிட்டனர். ராஞ்சி போலீஸ் கமிஷனர் அனுஷ்மான் குமார் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானதை உறுதிப்படுத்தினார். இந்த சம்பவத்தில் 12 பேர் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 8 பேரும், 4 போலீசாரும் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் முதலில் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடத்தி கைது செய்யப்படுவார்கள் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
. உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோ, பிரயாக்ராஜ், சஹாரன்பூர், மொரதாபாத், ராம்பூர் நகரங்களில் பேராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இந்த வன்முறையில் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. உத்தரபிரதேசத்தில் நடந்த போராட்டம் தொடர்பாக 227 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அடையாளம் தெரியாத 5 ஆயிரம் பேர் மீது பிரயாக்ராஜ் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நவி மும்பையில் நடந்த கண்டன பேரணியில் ஆயிரம் பெண்கள் உள்பட 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர். போராட்டம் அமைதியாக நடந்தது. குஜராத்தில் அகமதாபாத், வதோதரா உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடந்தது. முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 9 மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]
- இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை […] - நித்தியானந்தாவின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் […]
- ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் […] - திருப்பரங்குன்றத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தகோரி சிபிஎம் கையைழுத்து இயக்கம்அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி திருப்பரங்குன்றத்தில் சிபிஎம் கட்சியின் சார்பில் மாபெரும் கையைழுத்து இயக்கம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் […]
- சொந்தக் கட்சியினராலேயே முதுகில் குத்தப்பட்டேன்..,
உத்தவ்தாக்கரே ஆதங்கம்..!மகாராஷ்டிராவின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட பால் தாக்கரேவால் துவங்கப்பட்ட சிவசேனா கட்சிக்கு என்றும் இல்லாத அளவிற்கு […] - பா.ஜ.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம் முடிவு?அதிமுக வில் தனக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஓபிஎஸ் பாஜகவிலோ அல்லது அமமுகவிலோ இணைவார் என […]
- கோவில்பட்டி ரயில்நிலையத்தில் கடலைமிட்டாய் விற்பனை அறிமுகம்..!தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்நியைலத்தில், சோதனைமுறையில் 15 நாட்கள் கடலை மிட்டாய் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ரயில்வே […]
- என் நாய்க்கும் ஃப்ளைட் டிக்கெட் போடுங்கள்.,
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா..!என் நாய்க்கும் சேர்த்து ஃப்ளைட் டிக்கெட் போட்டால்தான் ஷட்டிங்கிற்கு வருவேன் என தயாரிப்பாளர்களிடம் கறாராகப் பேசியிருப்பதாக […] - 37,984 பேரின் நகைக்கடனை திரும்ப வசூலிக்க ஏற்பாடுவிதிகளை மீறி தள்ளுபடி பெற்ற 37,984 பேரின் நகைக்கடனை திரும்ப வசூலிக்க நடவடிக்கை.தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு […]
- அழகு குறிப்புகள்முகம் மென்மையாக:2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 ஸ்பூன் பால் மற்றும் அதே அளவு வெள்ளரிக்காய் […]
- சமையல் குறிப்புகள்காளான் மிளகு வறுவல்: தேவையான பொருள்கள்:-காளான் – 200 கிராம் வெங்காயம் – 2 பச்சை […]
- பொது அறிவு வினா விடைகள்சமஸ்கிருதத்தை அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்ட மாநிலம் எது?உத்தரகாண்ட் முதல் பெண் இந்திய விண்வெளி வீரரின் பெயரைக் […]