

இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலக கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியது. மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்துக்கு 138 ரன் இலக்காக நிர்ணயித்தது. ஷான் மசூத் 28 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் பாபர் ஆசம் 28 பந்தில் 32 ரன்னும் எடுத்தனர். சாம்கரன் 3 விக்கெட்டும், ஆதில் ரஷீத், கிறிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. பென் ஸ்டோக்ஸ் 49 பந்தில் 52 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) கேப்டன் பட்லர் 17 பந்தில் 26 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டும், சதாப் கான், முகமது வாசிம் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து அணி 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2010-ல் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையை 2 முறை வென்ற வெஸ்ட் இண்டீசுடன் (2012, 2016) இங்கிலாந்து இணைந்தது.
இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) ஆகிய நாடுகள் தலா ஒரு முறை 20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளன. இங்கிலாந்து உலக கோப்பையை வெல்ல வேகப்பந்து வீரர் சாம்கரன் முக்கிய பங்கு வகித்தார். இறுதி போட்டியில் 12 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய அவர் இந்த தொடரில் மொத்தம் 13 விக்கெட் கைப்பற்றினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரட்டை விருதை பெற்றார். இது குறித்து சாம்கரன் கூறியதாவது:- உலக கோப்பையை வென்றதை சொல்வதற்கு வார்த்தைகளை கொஞ்சம் இழந்து விட்டேன். இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடி வருகிறோம். பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் அபாரமாக இருந்தது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் உதவியாக இருந்தது. அதில் நிறைய கற்றுக் கொண்டேன். பல போட்டிகளில் ஆடிய வீரர்களிடம் இருந்து கற்றுக் கொண்டது அற்புதமான தருணம். நான் எப்போதும் கற்று வருகிறேன். என்னை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் விளையாட வருவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சாம்கரன்
பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது.., ஆளுநர் ஆனந்த ஜோதி..!தோப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது ஆளுநர் ஆனந்த ஜோதி… Read more: அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது.., ஆளுநர் ஆனந்த ஜோதி..!
- கனவுகள் மெய்ப்பட 23 எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி…கோவை குரும்பபாளையம் ஆதித்யா கல்வி குழுமம் சார்பாக கல்வி பயிலும் மாணவ,மாணவிகள் பயன்பெறும் விதமாக கனவுகள்… Read more: கனவுகள் மெய்ப்பட 23 எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி…
- திருப்பதியில் பிரதமர் மோடி தரிசனம்..,
- பிரதமர் மோடி திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசன காட்சிகள்…
- அரசு உதவி பெறும் பள்ளியை, தனிநபருக்கு பெயர் மாற்றம் செய்து மோசடி…தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை முத்துராஜா தெருவில் இயங்கி வருகிறது நாடார் நடுநிலைப்பள்ளி, இப்பள்ளியில் ஒன்றாம்… Read more: அரசு உதவி பெறும் பள்ளியை, தனிநபருக்கு பெயர் மாற்றம் செய்து மோசடி…
- குறிச்சி பகுதியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை சில நாட்களில் திறக்கப்படும் – மாவட்ட ஆட்சியர்…கோவை மாநகராட்சி ரேஸ் கோர்ஸ் மற்றும் சுங்கம் பகுதியில் தனியார்(GKNM Hospital) பங்களிப்புடன் தமிழர்களின் கலாச்சாரத்தை… Read more: குறிச்சி பகுதியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை சில நாட்களில் திறக்கப்படும் – மாவட்ட ஆட்சியர்…
- காந்தி சிலை உடைப்பு.., கம்பம் நகரில் பரபரப்பு…தேனி மாவட்டம் கம்பம் நகரில் குமுளி தேனி தேசிய நெடுஞ்சாலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டு உள்ளது.… Read more: காந்தி சிலை உடைப்பு.., கம்பம் நகரில் பரபரப்பு…
- விவசாய நிலங்களை முறைகேடாக பத்திர பதிவு.., பார்வட் ப்ளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம்…செல்லம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் விவசாய நிலங்களை முறைகேடாக பத்திர பதிவு செய்து வருவதாக குற்றம்… Read more: விவசாய நிலங்களை முறைகேடாக பத்திர பதிவு.., பார்வட் ப்ளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம்…
- “நாடு” திரை விமர்சனம்எம் சரவணன் இயக்கத்தில் தர்ஷன், மகிமா நம்பியார், நடித்து வெளிவந்த திரைப்படம் “நாடு”. இத் திரைப்படத்தில்… Read more: “நாடு” திரை விமர்சனம்
- திமுக ஆட்சியில் கிணற்றில் போட்ட கல்லாக மதுரை டைட்டில் பார்க்.., சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!திமுக ஆட்சியில் மதுரையில் அறிவித்த டைட்டில் பார்க் கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருக்கிறது என அதிமுக… Read more: திமுக ஆட்சியில் கிணற்றில் போட்ட கல்லாக மதுரை டைட்டில் பார்க்.., சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!
- சிறுவர் உட்பட ஐந்து பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் இருவர் கைது..,மதுரை பெருங்குடி பகுதியில் சிறுவர் உட்பட ஐந்து பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் இருவர் கைது.… Read more: சிறுவர் உட்பட ஐந்து பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் இருவர் கைது..,
- வட மாநில தொழிலாளி கொலை… ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை..,மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் பகுதியில் அரசு காசநோய் மருத்துவமனை உள்ளது இங்கு புதிய… Read more: வட மாநில தொழிலாளி கொலை… ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை..,
- வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்தை துவக்கி வைத்த முதலமைச்சர்..!தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read more: வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்தை துவக்கி வைத்த முதலமைச்சர்..!
- நற்றிணைப் பாடல் 308:செல விரைவுற்ற அரவம் போற்றி,மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழையாம் தற் கரையவும், நாணினள்… Read more: நற்றிணைப் பாடல் 308:
- பொது அறிவு வினா விடைகள்
