• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டிச.10 அன்று வேலூரில் நடைபெறவிருக்கும் மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம்..!

கன்னியாகுமரியில் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதியன்று வேலூரில் நடைபெறவிருக்கும் மாநாடு குறித்த நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 
சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் டிசம்பர் 10ஆம் தேதியன்று, வேலூரில் நடைபெற இருக்கும் மாநாடு சம்பந்தப்பட்ட தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் கூட்டம், கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கலைக் கல்லூரி  கலையரங்கில் நடைபெற்றது.   கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சர்வதேச உரிமைகள் கழகம் அமைப்பினர் விழா நிகழ்ச்சியை முழுமையாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வேலூர் மாநாடு தமிழகம் அளவிலான ஒரு திருப்பு முனையாக அமையும் என தெரிவித்தார்.சர்வதேச உரிமைகள் கழகம் நிறுவனத்தலைவர் முனைவர்.எஸ். சுரேஷ் கண்ணன் தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களின், அனைத்து நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்திற்கு வழக்கறிஞர்.டி.கே. அசோக் குமார் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சர்வதேச உரிமைகள் கழகம் பொறுப்பாளர்கள் பி.எல்.லாறன்ஸ்,டி. சுரேஷ் குமார்,டி.பச்சைமால் ஆற்றிய சிறப்பு மிகுந்த பணிகளை. நிறுவனத்தலைவர். முனைவர்.எஸ். சுரேஷ் கண்ணன் பாராட்டினார்.