விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 38ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
கோவை திமுக சார்பில் அஞ்சலி
கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடுவின் நினைவிடத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.இரவி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், ஏ.பி.நாகராஜ் முன்னாள் எம்பி, வி.சி.ஆறுக்குட்டி முன்னாள் எம்எல்ஏ., மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், மாவட்ட துணை செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, துணை மேயர் இரா. வெற்றிச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.பி.சுப்பிரமணியம், டி.ஆர்.சண்முகசுந்தரம், ஏர்போர்ட் ராஜேந்திரன், பி.ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சரஸ்வதி புஷ்பராஜ், எஸ்.எஸ்.குளம் சுரேஷ்குமார், அஸ்ரப் அலி, அறிவரசு, சுரேந்திரன், எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம் மாநகர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அக்ரி பாலு, கார்த்திக் செல்வராஜ், கே.எம்.ரவி, ஏ.எம்.கிருஷ்ணராஜ், சோமு சந்தோஷ், அப்துல் ரகுமான், காளப்பட்டி விஜயகுமார், ஆர்.கே.சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.