ராகுல்காந்தி இன்று மாலை கன்னியாகுமரியிலிருந்து தனது நடைபயணத்தை தொடங்குகிறார். இந்நிலையில் காந்தி மண்டபத்தில் ராகுல் உடன் ஸ்டாலின் தியானம் செய்தார்.
இன்னும் சற்று நேரத்தில் ராகுல் கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை துவங்க உள்ளார். அவரது நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். குமரியில் உள்ள காந்தி மண்டபத்தை ராகுல்காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். “பாரத் ஜோடோ யாத்ரா”(பாரதமே ஒன்றிணைவோம் ) நடைபயணத்தை ராகுல் காந்தி இன்னும் சற்று நேர்த்தில் துவங்க உள்ளார். இந்நிலையில் ராகுலுடன் ,முதல்வர் மு.க.ஸ்டாலின் ,காந்தி மண்டபத்தில் தரையில் அமர்ந்து தியானம் செய்தார். அங்கு காந்தியன் புகழ் வில்லுப்பாட்டு மூலம் பாடப்படுகிறது.,