• Tue. Apr 16th, 2024

முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்

ByKalamegam Viswanathan

Jun 7, 2023

முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, உண்டியலை திருட வேண்டும் என்பதுதான் மதுரையில் எச் .ராஜா பேட்டி
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி வழிபாடு செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: எச்.ராஜா பேட்டி.:
12-2-2018 ஆம் ஆண்டு மதுரை பென்ச் திருப்பியும் அதன் பிறகு 07-06-2021 சூமோட்டோ வழக்கில் நீதிபதி மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். அதன்படி கோவில் நிலங்களை எந்த பொது காரியத்திற்கும் விற்கக் கூடாது என்று சென்னை நீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள். இந்த தீர்ப்பை மாற்ற வேண்டும் என்றாலும் கூட இதை விட அதிக உறுப்பினர்கள் இருக்கும் பெஞ்ச் தான் மாற்ற முடியும்.
மதுரையில் உள்ள உயர் நீதிமன்ற கிளைக்கு எதிராக உள்ள இடத்தை வாகன நிறுத்தத்திற்கு ஒத்திக்கு வேண்டும் என்று கோரப்படுகிறது. ஆனால் அறநிலையத்துறை சார்பாக அந்த இடத்தை நீதிமன்றத்திற்கே விற்க்கிறோம் என்று சொல்கிறார்கள்.
அல்லேலூயா பாபு கும்பல் உள்நோக்கத்துடன் உயர் நீதிமன்றத்திற்கு கோவில் நிலத்தை விற்று விட்டால், நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் நிலங்களையும் கொடுத்து விடலாம், முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, உண்டியலை திருட வேண்டும் என்பதுதான். அதற்கு தடையாக இருப்பது சூ மோட்டோ வழக்கு, அதனால் தந்திரமாக கையாளுகிறார்கள், எனவே நீதிமன்றம் அதை புரிந்து கொண்டு அறநிலையத்துறைக்கு ஒரு நிலத்தையும் விற்பதற்கு உரிமை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும், இந்து கோவில் சொத்துக்களை விற்றால் போராட்டம் நடக்கும்,
மசூதி, சர்ச் சொத்துக்களை விற்க முடியுமா. ஏற்கனவே உயர் நீதிமன்றத்திற்கு 150 ஏக்கர் நிலம் உள்ளது, எனவே அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை என்பது எனது கருத்து.
ஒரிசா ரயில் விபத்து விவகாரத்தில் தொழில்நுட்பக் கோளாறு என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது சதி வேலை என்று குறிப்பிடப்படுகிறது என்ற கேள்விக்கு:
சதி வேலைக்கு வாய்ப்புள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். ஏனென்றால் ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவாக உள்ளார் என்று தெரிகிறது. தொழில்நுட்பத் கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை, வேண்டுமென்றே யாராவது திருப்பி விட்டு இருந்தால் தான் நடக்கும், ஏனென்றால் அர்பன் நக்சல் இங்கு டயரை வைத்து ரயிலை தவிர்க்க இரண்டு நாட்களுக்கு முன்பு முயற்சி ஏற்பட்டது, எனவே இந்தியாவில் அர்பன் எக்ஸெல் பல இடத்தில் இருப்பதால், இது சதித்திட்டமாக இருக்கலாம், சிபிஐ விசாரணை அறிக்கைக்கு பிறகு உறுதிப்படுத்த முடியும்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என திருமாவளவன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு:
திருமாவளவன் எனும் தீய சக்தி யார், 22 பேர் விஷ சாராய வழக்கில் இறந்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்காத வாய் இந்த விவகாரத்தில் திறக்கக் கூடாது. டெல்லியில் இருந்து தென் மாவட்டங்களை கொளுத்துவேன் என்று சொன்ன தீய சக்தி தானே, இந்து சமுதாயத்தில் உள்ள அனைத்து நபர்களையும் இழிவுபடுத்தி பேசியவர் தானே, ஷட்அப், வாயை திறக்க அவருக்கு உரிமை இல்லை, இந்தியாவில் என்ஐஏ வின் செயல்பாடுகள் 94 சதவீதம் வெற்றியை பெற்றுள்ள நிலையில், மதுரையில் ஐந்து பேரை கைது செய்துள்ளனர், அதில் ஒரு சிலர் வழக்கறிஞர்களாகவும் இருக்கலாம், ஆனால் அவர்கள் பிஎஃப்ஐ அமைப்பைச் சார்ந்தவர்கள், எனவே இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கல்வி உயர்கல்வியாக இருந்தாலும் அமைச்சர் பொன்முடி உயர்ந்தவரா என்று தெரியவில்லை, ஆளுநர் இவ்வளவு பெரிய மாளிகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார், ஆர்.என்.ரவிக்கு என தனியாக மாளிகை கட்டப்பட்டுள்ளதா, இதற்கு முன்பாக இருந்த ஆளுநர்கள் குச்சி வீட்டில் இருந்தார்களா. அப்போது ஏன்டா எவனும் பேசவில்லை, பேசிய அனைவரையும் கேட்கிறேன், இப்போது ஆர்.என்.ரவிக்கு எதிராக ஆதங்கம் எதற்கு, ஆளுநர் துணைவேந்தர்களுடன் பேசுகிறார், சாலையில் செல்பவர்களுடன் பேசவில்லை, பொன்முடியை களோக்கியலில் சொன்னால் என்னாகும் என்று தெரியவில்லை, அவர்களுடன் பேசவில்லை படித்தவர்களுடன் பேசுகிறார். அப்படி பேசும்போது பொருளாதாரம் பற்றி பேசுகிறார், சீனாவில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவிற்கு வர விரும்புகிறார்கள், எனவே அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் வீணாக நேரில் சென்று அழைக்க வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு முதல்வர் கூட ஒன்றும் சொல்லவில்லை, இந்தியாவிற்கு வர விரும்புகிறார்கள் என்று தான் சொல்லியிருக்கிறார். அதனால் வைகோ போன்றிருக்கும் அரை வேக்காடுகள் எல்லாம் வாயை மூடி இருப்பது நல்லது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *