• Mon. May 6th, 2024

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

Byவிஷா

Dec 20, 2023

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான வானிலை அறிக்கையில், “இன்று மதியம் 1 மணிக்குள் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம். சாலைகள் வழுக்கும் தன்மையும் இருக்கும். சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். பழுதான கட்டிடங்கள் சேதம் ஆடைவதற்கான வாய்ப்பு உள்ளது.” என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *