• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 458.

குறள் 458.

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப் புடைத்து பொருள்(மு.வ) மனத்தின்‌ நன்மையை உறுதியாக உடையவராயினும்‌ சான்றோர்க்கு இனத்தின்‌ நன்மை மேலும்‌ நல்ல காவலாக அமைவதாகும்‌.

குறள் 457

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்எல்லாப் புகழும் தரும் பொருள் (மு.வ): மனத்தின்‌ நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்‌; இனத்தின்‌ நன்மை (அவ்வளவோடு நிற்காமல்‌) எல்லாப்‌ புகழையும்‌ கொடுக்கும்‌.

குறள் 456

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்குஇல்லைநன் றாகா வினை பொருள் (மு.வ): மனம்‌ தூய்மையாகப்‌ பெற்றவர்க்கு அவர்க்குப்பின்‌ எஞ்சி நிற்கும்‌ புகழ்‌ முதலியவை நன்மையாகும்‌. இனம்‌ தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல்‌ இல்லை.

குறள் 455

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனந்தூய்மை தூவா வரும் பொருள் (மு.வ): மனத்தின்‌ தூய்மை, செய்யும்‌ செயலின்‌ தூய்மை ஆகிய இவ்விரண்டும்‌ சேர்ந்த இனத்தின்‌ தூய்மையைப்‌ பொறுத்தே ஏற்படும்‌.

குறள் 454

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்குஇனத்துள தாகும் அறிவு பொருள் (மு.வ): ஒருவனுக்குச்‌ சிறப்பறிவு மனத்தில்‌ உள்ளது போலக்காட்டி (உண்மையாக நோக்கும்‌ போது) அவன்‌ சேர்ந்த இனத்தில்‌ உள்ளதாகும்‌.

குறள் 453:

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னான் எனப்படுஞ் சொல். பொருள் (மு.வ): மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

குறள் 452:

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்குஇனத்தியல்ப தாகும் அறிவு.பொருள் (மு.வ): சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

பொது அறிவு வினா விடைகள்

குறள் 451

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும். பொருள் (மு.வ): பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

குறள் 450

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.