• Fri. Apr 19th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 340

குறள் 340

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சில் இருந்த உயிர்க்கு. பொருள் (மு.வ): (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.

குறள் 339

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. பொருள் (மு.வ): இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

குறள் 338

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு. பொருள் (மு.வ): உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

குறள் 337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல. பொருள் (மு.வ): அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை. ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.

குறள் 336

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. பொருள் (மு.வ): நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

குறள் 335

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யப் படும்.பொருள் (மு.வ):நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

குறள் 334

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்வாளது உணர்வார்ப் பெறின். பொருள் (மு.வ): வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.

குறள் 333

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல். பொருள் (மு.வ): செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

குறள் 332

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. பொருள் (மு.வ): பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

குறள் 331

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை. பொருள் (மு.வ): நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.