வெண்மையாக மாற
பாதி எலுமிச்சையிலிருந்து எடுக்கப்படும் சாறு மற்றும் நான்கு டீஸ்பூன் சந்தன பொடியை ஒன்றாக கலந்து பயன்படுத்தினால், வெயிலில் சருமத்தின் நிறம் கருப்பாவதற்கு தீர்வு கிடைக்கும்.
தழும்புகள் மறைய
தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். அதற்கு தக்காளி துண்டுகளையோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவிஇ தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.
புத்துணர்வுடன் இருக்க
செர்ரி, தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் சிறிது பால் சேர்த்து நன்றாக பசை போல அரைக்கவும். இக்கலவையை முகத்தில் தடவி நன்றாகக் காயும் வரை காத்திருக்க வேண்டும். அதன்பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதனால்…
கருவளையம் நீங்க
வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கிக் கொண்டு, அதைக் கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து, வெள்ளரிக்காயை அகற்றினால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி கருவளையங்களும் நீங்கி விடும்.
கண் வீக்கத்தினைப் போக்க
கண்களில் ஏற்படும் வீக்கத்தினைப் போக்குவதற்கு ஈரமான தேயிலைத்தூள் பை, வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகள் ஆகியவற்றை கண்கள் மீது சுமார் 10 நிமிடங்கள் வைத்துக் கொண்டால் உடனடியான பலனை உணரலாம்.
அழகினைப் பெற
ஜாதிக்காய், மாசிக்காய், இலவங்கம் மூன்றையும் பொடி செய்து வைத்துக்கொண்டு வாரம் ஒரு முறை முகத்தில் போட்டு நன்கு தேய்த்துவிட்டுக் கழுவினால் முகத்தில் மாசு மருவற்ற அழகினைப் பெறலாம்.
துளைகள் சுருங்கி முகம் பொலிவு பெற
ஒரு டீஸ்பூன் தக்காளிச் சாறுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால் முகத்தில் உள்ள பெரிய துளைகள்…
தலை முடி ஆரோக்கியமாக
வெந்தயம் மற்றும் கடுகை ஊறவைத்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து அதனை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடிக்கு குளுமையும் ஆரோக்கியமும் கிட்டும்.
முடி உதிர்வு கட்டுப்படுத்த
கடுகு 100 கிராம், சீயக்காய் ஒரு கிலோ, துவரை 100 கிராம், வெந்தயம் அரை கிலோ அரைத்துப் பொடி செய்து கொண்டு தலைக்கு பயன்படுத்தவும். தலை முடி நிலைக்கும்.
உதட்டிற்கு மேல் உள்ள கருமை நீங்க
ஒரு பௌலில் கேரட் ஜூஸை எடுத்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி கேரட் ஜூஸை உதட்டிற்கு மேலே தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கிவிடும். இதற்கு கேரட் ஜூஸில்…



