நாகர்கோவிலை சேர்ந்த நான்கு வழக்கறிஞர்கள் இளமுருகு, மார்த்தாண்டம்,சுப்பிரமணி,என்.ஜி.ஓ.காலணியை சேர்ந்த பெருமாள் பிள்ளை ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில். நான்கு பேர் மீதும் முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.இதனை கண்டித்து .வழக்கறிஞர்கள் போராட்டம்.
நாகர்கோவிலில் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் வழக்கறிஞர் பாலஜனாதிபதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.இதனால் நீதிமன்றம் முக்கிய சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில்.

குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தலைமையில் நீதிமன்றம் முன் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நான்கு வழக்கறிஞர்கள் முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில்.வனத்துறை அதிகாரிகளை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடை பெற்றது குறித்து.வடசேரி மாவட்ட தலைமை வனத்துறை அலுவலக அதிகாரிகள் இடம் விசாரித்தபேது கிடைத்த தகவல்கள்.

ஆரல்வாய்மொழி அருகேயுள்ள தெற்கு கருங்குளம் பகுதியில் முள்ளம் பன்றியை சிலர் வேட்டையாடி பிடிப்பதாக.மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து பூதப்பாண்டி வனச்சரக அதிகாரிகள்,வன ஊழியர்கள் கருங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படுபடி நின்ற இருவரை வன ஊழியர்கள் அணுகி விசாரிக்க முயன்ற போது இருவரும் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.இதனை கண்ட அதிகாரிகள் வாகனத்தில் விரைந்து சென்று இருவரை பிடித்து.அவர்கள் கையில் இருந்த சாக்கு பையை சோதனை இட்டபோது. சாக்கு பையில் ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் ஒரு வெட்டு கத்தியும் இருந்ததாம். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது.ஒருவர் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் மற்றொருவர் ஜான் பெர்லின் என்பதும்.அந்த பகுதியில் முள்ளம் பன்றி ஒன்றை வேட்டையாடி பிடித்ததாக ஒப்புக்கொண்டவர்கள்.இவர்கள் இருவரிடமிருந்து கார் மற்றும் இருசக்கர வாகனம்,வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி,வெட்டுகத்தி ஆகிய வற்றை பறிமுதல் செய்ததுடன்.இருவரிடம் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் இவர்களுடன் நான்கு வழக்கறிஞர்கள் உடந்தையாக இருந்தது தெரிய வந்த நிலையில்.சம்பந்தபட்ட நான்கு வழக்கறிஞர்களையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.


வழக்கறிஞர்கள் நான்கு பேரை கைது செய்த வனத்துறை அதிகாரிகளை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதி மன்றம் முன் போராட்டம் நடத்தியது குறித்து கோட்டார் காவல் நிலையத்தில். வழக்கறிஞர்கள் 60_பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் நான்கு பேரில் ஒருவரது இல்லம் அந்த பகுதியில் இருப்பதும்.முள்ளம் பன்றியை இருவர் பிடிப்பதை பார்த்து அவர்களை எச்சரித்த ஆத்திரத்தில்.முள்ளம் பன்றியை பிடித்ததற்கா கைது செய்யப்பட்டவார்களின் தவறான தகவலில் வழக்கறிஞர்கள் நான்கு பேர் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் என்ற கருத்தும் அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் தெரிவித்தனர்.
வழக்கறிஞர்கள் , வனத்துறை அதிகாரிகள் இடையே ஏற்பட்டுள்ள இந்த வழக்கு பொது மக்களின் மத்தியிலும் ஒரு பேசு பொருளாக உலா வருகிறது.
- போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி தகவல் பொதுமக்கள் கவனமாக இருக்க […]
- தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது -ஓபிஎஸ்அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்அப்போது […]
- மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்தது சென்னைமெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, […]
- மதுரை விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புஅவனியாபுரம் ஜேஜே நகர் பகுதியில் சாலை,சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கும் […]
- மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்து மதுரையில் அண்ணாமலை பேட்டிதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் மதுரை […]
- சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிவைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு […]
- பொன்னியின் செல்வன் படம் வந்ததால செங்கோல் தந்ததாக கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள் – என்.ராம்அதிகார மாற்றத்துக்காக செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். செங்கோல் […]
- ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு!..சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பயணித்தவர் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் […]
- சாராயத்தை உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது […]
- இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 […]
- 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!..திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது […]
- சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனாதனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது […]
- செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி […]
- 150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற […]
- 500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்புதமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு […]