• Fri. Apr 19th, 2024

ரூ1க்கு காலை உணவு.!!!… அசத்தும் திருநங்கைகளின் சேவை

ByA.Tamilselvan

Sep 23, 2022

மும்பையில் ரூ1க்கு காலை உணவும் மதியம் ரூ.10க்கும் வழங்கி திருநங்கைகள் உணவகம் நடத்தி வருகின்றனர்.
மும்பையில் 5 ஆயிரம் திருநங்கைகள் இணைந்து உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த உணவகத்தில் காலை உணவு வெறும் 1ரூபாய்க்கும், மதிய உணவு 10ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. இந்த உணவகத்திற்கு யாரும் உதவி செய்வதில்லை. திருநங்கைகள் அனைவரும் நாள்தோறும் தாங்கள் பெறும் யாசகத்தில் இருந்து இந்த உணவத்திற்கு நிதி வழங்குகிறார்கள். ஏழை,எளியோரின் பசியை போக்கும் நோக்கில் உணவகம் தொடங்கியுள்ள இவர்களின் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *