உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று 7 முன்னணி ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 312 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில், உத்தர பிரதேசதேர்தல் தொடர்பாக 7 முன்னணிஊடகங்கள் கருத்து கணிப்புகளைநடத்தி முடிவுகளை வெளியிட்டுள் ளன. ஏபிபி நியூஸ், சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 223-235 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கூட்டணி 145-157 இடங்களைக் கைப்பற்றும். பகுஜன் சமாஜ் 8-16, காங்கிரஸ் 3-7 இடங்களை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 230-235, சமாஜ்வாதி கூட்டணி 160-165, பகுஜன் சமாஜ் 2-5, காங்கிரஸ் 3-7 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி, பி மார்க் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 252-272, சமாஜ்வாதி கூட்டணி 111-131, பகுஜன் சமாஜ் 8-16, காங்கிரஸ் 3-9 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நியூஸ் எக்ஸ், போல்ஸ்டாரட் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 235-245, சமாஜ்வாதி கூட்டணி 120-130, பகுஜன் சமாஜ் 13-16, காங்கிரஸ் 4-5 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ், வீட்டோ இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 227-254, சமாஜ்வாதி கூட்டணி 136-151, பகுஜன் சமாஜ் 8-14, காங்கிரஸ் 6-11 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி, டிசைன்பாக்ஸ்டு நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 245-267, சமாஜ்வாதி கூட்டணி 125-148, பகுஜன் சமாஜ் 5-9, காங்கிரஸ் 3-7 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா நியூஸ், ஜன் கி பாத் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 226-246, சமாஜ்வாதி கூட்டணி 144-160, பகுஜன் சமாஜ் 8-12, காங்கிரஸ் 0-1 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த 7 முன்னணி ஊடகங்களின் கருத்து கணிப்புகளை ஒப்பிடும் போது சராசரியாக பாஜக கூட்டணி 235-249, சமாஜ்வாதி கூட்டணி 137-147, பகுஜன் சமாஜ் 7-13, காங்கிரஸ் 3-7 தொகுதிகளை கைப்பற்றக்கூடும்.
உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 202 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஏழு முன்னணி ஊடகங்களின் கருத்து கணிப்புகளில் பாஜக கூட்டணிக்கே வெற்றிவாய்ப்பு இருக்கிறது. எனினும் கடந்த தேர்தலைவிட பாஜகவுக்கு குறைந்த இடங்களேகிடைக்கும் என்று தெரிகிறது.
உ.பி. தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அந்த கட்சி மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என கருதப்படுகிறது. இந்தியாவின் இருதயமாகக் கருதப்படும் உத்தர பிரதேசத்தில் மிக அதிகபட்சமாக 80 மக்களவை தொகுதிகள் உள்ளன.
உ.பி.யில் 3 அமைச்சர்கள் உட்பட 11 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். அவர் களில் பெரும்பாலானோர் சமாஜ்வாதியில் இணைந்தனர். முதல்வர் ஆதித்யநாத் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிக்கப் படுவதாக அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். எனினும் பாஜகவின் தேர்தல் வியூகத்தால் அந்த கட்சி அறுதிப்பான்மையை எட்டிவிடும் என்று நம்பப்படுகிறது.
- இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய்10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்;2019ம் ஆண்டில் […]
- திருப்பரங்குன்றம் உண்டியல் வருமானம் ரூ52 லட்சம் உட்பட தங்கம், வெள்ளி பொருட்கள் கிடைத்தனதிருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.52 லட்சம் தங்கம் 253 கிராம். வெள்ளி 2 கிலோ […]
- அடியாட்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த முயல்வதாக நில அளவையருடன் வாக்குவாதம்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை அடியாட்கள் மூலம் கையகப்படுத்த முயல்வதாக […]
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]