வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்
திமுக அரசை கண்டித்தும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும்.ஜூலை 5ஆம் தேதி தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என, அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று பாஜகவினர் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் பாஜக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் வணங்காமுடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பாஜகவின் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வணங்காமுடி செய்தியாளர்களிடம் பேசும் போது,மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
விடியல் அரசு என்று சொல்லி மக்களின் விடியாஅரசாக இருக்கும் திமுக அரசை கண்டித்தும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மனசாட்சி இல்லாத ஸ்டாலின் அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மதுவிலக்கை ரத்து செய்யவில்லை, இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தற்போது வரை வழங்கவில்லை,பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்றார்கள் அதுவும் இல்லை, ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்களுக்கு 25000 இன்னும் வழங்கவில்லை எனவும், மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டோம் என்று மன உறுத்தல் இல்லாமல் மனசாட்சி இல்லாமல் ஆட்சி செய்யும் ஸ்டாலின் அரசை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது என்றார்.மேலும் அவர் பேசுகையில் உடனடியாக ஸ்டாலின் பதவியை விட்டு விலக வேண்டும் என்று தெரிவித்தார்.
- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]