பாஜக கட்சியினரிடமிருந்து உண்மையே வெளியில் வராது சாவு வீட்டிலும் அரசியல் பண்ணக்கூடிய கட்சிதான் பாஜக என கடுமையாக விமர்சித்தார்….
சேலத்தில் காங்கிரஸ் பிரமுகரின் சகோதரர் மறைந்ததையொட்டி இரங்கல் நிகழ்விற்கு ஆறுதல் தெரிவிக்க வருகை தந்த கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வகுமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்… வருகை தந்தகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் ராணுவ வீரரின் படுகொலை சம்பவம் நடந்தது. அந்த வீரரின் உறவினர்களுக்கிடையே இருந்த பகையின் காரணமாக நடந்ததாக கூறப்படுகிறது. வன்முறை எந்த உருவத்தில் வந்தாலும் நிச்சயமாக அது கண்டிக்கத்தக்கது நியாயப்படுத்த முடியாதது. இது சாதி ரீதியாக வந்தாலும் மதரீதியாக வந்தாலும் மொழி ரீதியாக வந்தாலும் கண்டிக்கக் வேண்டும்.ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் இந்தியாவில் எங்குமே நடக்காதது போல் தேசிய அளவில் ஒரு பிரச்சினையாக, செய்தியாக கொண்டு வருகின்றனர் இந்தியாவில் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் தினசரி படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் ஆனால் எந்த செய்தியும் வெளிவருவதில்லை கடந்த 9 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பலி கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்த ஒன்பது ஆண்டுகளில் தான் ராணுவ வீரர்களின் படுகொலைகள் அதிக அளவில் நிகழ்ந்துள்ளது ஆனால் அதைப்பற்றி பாஜகவினர் வாய் திறக்க மாட்டார்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசவே மாட்டார் எனவும் கர்நாடகா மாநிலத்திலும், மத்தியிலும் பிஜேபி ஆட்சி ஆனால் சேலம் மாவட்டம் கொளத்தூர் கோவிந்தபாடி அடுத்த தமிழக கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதியில் மீனவர் ராஜா சுட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு வாய் திறக்கவே மாட்டார்கள் என குற்றம் சாட்டினார் இதுதான் பாரதிய ஜனதா கட்சியினுடைய இரட்டை வேடம் இது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும் தமிழக அரசு கர்நாடக அரசிடம் பேசி நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாக கூறினார்.
மேலும் மதம் என்ற ஒரு ஆயுதத்தை கைவிட்டால் பாரதிய ஜனதா கட்சி என்ற இயக்கமே இருக்காது எனவும் கூறினார்.
மேலும் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்காளர்களை அடைத்து வைத்ததாக எழும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் தமிழ்நாடு அரசியலில் பல தேர்தல்களை சந்தித்து இருக்கிறோம். ஆர் கே நகரில் தினகரன், அதிமுக போட்டி போட்டு வாக்காளர்களை அடைத்து வைக்கக்கூடிய செயல்பாடுகளை துவக்கி வைத்தனர் ஆதலால் அவர்களுடைய பார்வைக்கு மற்றவர்களும் அடைத்து வைப்பார்கள் என்று அவர்களுக்கு தோன்றுகிறது அதுபோன்று எந்த ஒரு அடக்குமுறையும் அங்கு இல்லை சுதந்திரமாக மக்கள் நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள். எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்கு செல்லும்போது ஊர் மக்கள் யாரும் வரவேற்பு கொடுக்காததால் வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து வரவேற்பு கொடுத்து கொண்டிருக்கிறார்கள் அந்த ஆதங்கத்தில் பேசி வருகிறார் என்றும் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெரும் என கூறினார்.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]