தமிழகத்தில் எம்.பி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடும் என்று மாநிலத்தலைவர் அண்ணாலை தெரிவித்தார்.
எம்.பி தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோன்று பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரிகளும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் இந்த தேர்தலை சந்திப்பதற்காக ஆயத்தப்பணிகளை தமிழக பா.ஜ.க. ஏற்கனவே தொடங்கிவிட்டது. பூத் கமிட்டிகள் அமைத்து அதனை வலுப்படுத்தும் நடவடிக்கையில் அக்கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்கள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 3 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, முன்னாள் எம்.பி. ராமலிங்கம், வி.பி.துரைசாமி, துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், எஸ்.சதீஷ்குமார் உள்பட நிர்வாகிகளும் பங்கேற்றனர். எச்.ராஜா மட்டும் இடையிலே புறப்பட்டு சென்றுவிட்டார்.
பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பரபரப்பு கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் பேசியதாக வெளியாகி உள்ள தகவல் வருமாறு:- எம்.பி. தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற வேண்டும். இதற்காக இன்று முதலே ஒவ்வொரு நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. பிளவுபட்டு இருக்கிறது. அக்கட்சி பிரச்சினை தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமி வாழ்க…, ஓ.பன்னீர்செல்வம் வாழ்க…, என்று நாம் அவர்கள் பின்னால் செல்ல தேவையில்லை. அவசியமும் இல்லை. அவர்களுடன் (அ.தி.மு.க.) கூட்டணி வைப்பதை பொதுமக்கள் விரும்பமாட்டார்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து களம் கண்டு கணிசமாக வாக்குகளை பெற்றது. அதேபோன்று தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம். இவ்வாறு அவர் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தில் ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த 2 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய நிர்வாகிகள் அனைவரும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்கள். கூட்டணி குறித்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி தேர்வு படிவம்.., அஞ்சல் துறை செயலாளருக்கு சு. வெங்கடேசன் எம். பி கடிதம்!ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு […]
- இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!ஒன்பதாவது நாளான இன்று கிராமநிர்வாக அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தால் பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் […]
- ராஜபாளையத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் விநியோகம்!விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 33 விவசாயிகளுக்கு தென்னையில் ஊடுபயிராக பயிரிடுவதற்கு ஏற்ற நாட்டு […]
- சிவகாசியில், தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு அரிவாள் வெட்டு…
2 மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ள வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் குருராஜ் (34). இவர் சிவகாசியில் உள்ள […] - தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு…விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் […]
- எம்.புதுப்பட்டி, ஸ்ரீகூடமுடைய அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள, பிரசித்திபெற்ற அருள்மிக […]
- சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்புமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி வயசு 55 இவருக்கு திருமணம் […]
- கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்- மனைவி தீக்குளிக்க முயற்சிசென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தை அளவிடு செய்ய இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கும் வட்டாட்சியர் […]
- ஐஸ்கிரீமில் தவளை விவகாரம்- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுதிருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் உயிரிழந்த தவளை இருந்த விவகாரம்; கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்காக மாதிரிகள் […]
- திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன […]
- தலைக்கூத்தல் – சினிமா விமர்சனம்‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் […]
- கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்புகாவல்துறையினரின்நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் அவரது மனைவி […]
- மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்எல் ஐ சி ,எஸ் பி ஐ நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்த அதானி […]
- மதுரை வழியாக செல்லும் ரெயில்களின் போக்குவரத்து மாற்றம்..!!மதுரை, விருதுநகரில் இரட்டை ரெயில்வே பாதை இணைப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. […]
- சென்னை ஐகோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகள்- ஜனாதிபதி உத்தரவுசென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 17-ந் […]