காரியாபட்டியில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் பள்ளிவாசல்களில் நடை பெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சுழி சாலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஏராளமான ஆண்களும், பெண்களும் தொழுகையில் பங்கேற்றனர்.