15 மாதங்களுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றம் ஜாமினில் விடுதலை. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக தடை எதையும் உச்சநீதிமன்ற நிபந்தனையாக விதிக்கவில்லை என வக்கீல் இளங்கோ தெரிவித்தார்.
“செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாக விசாரணை குற்றவாளியாக இருப்பதால், அவரின் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது.
ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போடவேண்டும்.
இவ்வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் அவர் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இன்று மாலை அல்லது நாளை காலை அவர் சிறையில் இருந்து வெளியே வருவார்”
- செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ செய்தியாளர்கள் சந்திப்பு.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள்:
25 லட்ச ரூபாய் பாண்டு இருவர் தர வேண்டும்.
சாட்சியங்களை கலைக்கவோ அல்லது சந்தித்து பேசவோ கூடாது.
பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.
திங்கள், வெள்ளி கிழமைகளில் சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்பிடம் கையொப்பமிட வேண்டும்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தேவையில்லாமல் வாய்தா வாங்க கூடாது.








