விருதுநகர் மாவட்டத்தில் 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா ஆலோசனையின் பேரில் வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மண்டல துணை வட்டாட்சியர் பாண்டி , தலைமை யிடத்து துணை வட்டாட்சியர் சாலமன்,வெம்பக்கோட்டை வருவாய் ஆய்வாளர் நாகராஜன் வெம்பக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன் தலைமையில் வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




