• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவிகளுக்கு மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வு போட்டி

மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி நிலகிரி மஞ்சூர் அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மின்சாரம் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு பள்ளி மாணவர்களிடையே போட்டிகள் நடைபெற்றன.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் உதவி செயற்பொறியாளர் சிவன் மின்சார சேமிப்பு பற்றி விழிப்புணர்வை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.உதவியாளர் ராமன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் .பீ.ரவிக்குமார் வரவேற்றார். ஆசிரியர்கள் .ஆர்.சர்மிளா, ந.பாபி ஆகியோர் பங்கு பெற்றனர்