ஆகஸ்ட் -1 முதல் 7 வரை உலக தாய்பால்வாரம்
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதின் மிக அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆக.1 முதல் 7ம் தேதி வரை தாய்பால்வாரம் கொண்டாடப்படுகிறது.
உலக தாய்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம்தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்-சேய் இருவருக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ‘உலக தாய்ப்பால் வாரம்’ அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு தாய்மார்கள் கொடுக்கும் உன்னத பரிசு தாய்ப்பால். பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப்பால் மட்டும் தான், குழந்தை பிறந்தவுடன் தாயிடம் இருந்து வெளிப்படும் பாலை ‘கொலஸ்ட்ரம்’ என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். புரோட்டீன், கொழுப்பு அதிகமுள்ள இந்த பால் தான் குழந்தைக்கு கொடுக்கக்கூடிய முதல் தடுப்பு மருந்து என்றும், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இந்த பாலை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தற்போதைய காலச்சுழற்சியில் வேலைக்கு செல்லும் பெண்களும் தாய்ப்பால் பாதுகாப்பான முறையில் எடுத்து வைத்து கொடுக்கும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. அதேபோல், தாய்மார்கள் பணிபுரியும் இடங்களிலும், பேருந்து உள்ளிட்ட பொது இடங்களில் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன. தாய்ப்பாலில் எல்லா வகையான ஊட்டச்சத்து, உயிர்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் முழுமையான உடல், மன வளர்ச்சிக்கு இது காரணமாகிறது. தாய்ப்பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நீரிழிவு, குழந்தை பெற்றெடுத்த பிறகு மனச்சோர்வுகள் போன்றவற்றிலிருந்து தாய்மார்களை பாதுகாக்கிறது. குழந்தை பேற்றுக்குப் பிறகு மாதவிடாய் ஏற்படுவதை, கருப்பையில் கருமுட்டை உருவாவதை தாமதப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரக்கிறது. அதனால், தாயின் கர்ப்பப்பை எளிதாகச் சுருங்கி ரத்தப்போக்கைக் குறைப்பதுடன், கர்ப்பப்பை மீண்டும் அதன் பழைய நிலையை அடைய உதவுகிறது. பதற்றம், மன அழுத்தம், எதிர்மறை மனநிலை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பயங்கரவாத தாக்குதல் ..மதுரை ராணுவ வீரர் பலிராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரையைச்சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.ஜம்மு ,காஷ்மீரில்ராணுவ […]
- எஸ்.பி .வேலுமணி வழக்கு ..தடைவிதிக்க கோர்ட் மறுப்புமுன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.அதிமுக முன்னாள் அமைச்சர் […]
- நடுரோட்டில் கதறி அழுத போலீஸ்..வைரல்வீடியோஉ..பியில் மோசமான உணவு வழங்கப்படுவதை நடுரோட்டில் கதறி அழுத படியே முறையிடும் போலிஸ்காரரின் வீடியோ இந்தியா […]
- ரயில்வேயில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழாமதுரை கோட்ட ரயில் இயக்கத்துறையில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.75வது சுதந்திர தின […]
- மதுரை மாவட்ட முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வுமதுரை தனியார் அரங்கத்தில் நடைபெற்ற முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் […]
- முதல்வர் உத்தரவிட்டால் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க முடியும்- ஆர்.பி.உதயகுமார்தமிழக முதல்வர் உத்தரவிட்டால் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் வேட்டையாடி போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க […]
- சமையல் குறிப்புஈசியான சமையல் டிப்ஸ் ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக […]
- அழகு குறிப்புபொதுவாக பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. பெண்களின் முகம் அழகு […]
- குறள் 273வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று பொருள்(மு.வ): மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனை துளிகள் ஏழையாய் ஆனாலும் பெரும்செல்வந்தனாய் ஆனாலும்பிறருக்காக வாழ்ந்திடேல்பெரு மனிதனாய் போற்றப்படுவாய்… அர்த்தமுள்ள வாழ்க்கைதனைவாழ்ந்திட்ட ஒரு […]
- பொதுஅறிவு வினா விடைதூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர்?விடை: 1953 பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?விடை: ராஜாராம் மோகன்ராய் […]
- பூமியில் வாழும் மக்களுக்கு வானில் இருந்துவரும் ஆபத்துபூமியில் வாழும் நமக்கு வானில் இருந்து ஆபத்து வர இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.மனிதர்களுக்கு புதிய ஆபத்து […]
- தேசியக்கொடிக்கு ஏழைகளிடம் 20ரூபாய் கேட்பது வெட்ககேடு-ராகுல் காந்திதேசியக்கொடிக்கு ஏழைகளிடமிருந்து ரூபாய் 20 கேட்பது வெட்கக் கேடானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி […]
- பெண்குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தை தொடங்கியது ஆகாஷ்பைஜூ நிறுவனம்ஆகாஷ் பைஜூ நிறுவனம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற திட்டத்தை தொடங்கியதுதேசிய அளவில் […]
- ஒரே நாளில் 23 மாணவிகள் டிசி வாங்கிய பள்ளிதிருவள்ளூர் அருகே, விடுதியில் மாணவி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்ட கீழச்சேரி அரசு உதவிபெறும் பெண்கள் […]