இயக்கம் – ஆனந்த் எல் ராய்
இசை – ஏஆர் ரகுமான்
நடிப்பு – தனுஷ், அக்க்ஷய்குமார்,
சாரா அலிகான்
வெளியான தேதி – 24 டிசம்பர் 2021
நேரம் – 2 மணி நேரம் 17 நிமிடம்
இந்தியில் ‘அத்ரங்கி ரே’ என்ற பெயரில் வலைத் தளத்தில் வெளியாகியுள்ள படத்தின் தமிழ் பதிப்பு வடிவம் தான் கலாட்டா கல்யாணம் 2013ல் வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்திய ஆனந்த் எல்.ராய் மீண்டும் தனுஷை கதாநாயகனாக நடிக்க வைத்துள்ள இந்திப் படம் இது. அக்க்ஷய்குமார் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
பீகாரைச் சேர்ந்த பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் சாரா அலிகான். அவர் 21 முறை அவரது காதலன் அக்க்ஷய் குமாருடன் ஓடிச் செல்ல முயன்று, தோல்வியடைந்து குடும்பத்தினரிடம் சிக்கியவர். அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென முடிவெடுக்கிறார்கள். அந்த ஊருக்கு வந்த மருத்துவக் கல்லூரி மாணவர், தனுஷைக் கடத்தி வந்து கட்டாயக் கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள். அடுத்த இரண்டு நாட்களில் தனுஷுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் நடக்க வேண்டிய நிலையில் சாராவுடன் திருமணம் நடந்து விடுகிறது.
சாராவின் காதலன் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வரும் வரையில் இருவரும் ஒன்றாகத் தங்கியிருக்க முடிவெடுக்கிறார்கள். இருப்பினும் தனது திருமண நிச்சயத்திற்குச் செல்கிறார் தனுஷ். அங்கு உண்மை தெரியவர நிச்சயம் நின்று விடுகிறது. பின்னர் சாராவுடன் தான் தங்கி இருக்கும் விடுதிக்கு திரும்புகிறார். அக்க்ஷய்குமாரும் திரும்பி வர, அவருடன் சாராவை அனுப்ப முடிவு செய்யும் போது எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.
அது என்ன என்பதுதான் படத்தின் எஞ்சிய கதை.இடைவேளை வரை கலாட்டாவாக கடந்துபோகும் படம் அதன் பின் திரைக்கதையில் திருப்பம் இல்லாத காரணத்தால் தட்டுத்தடுமாறுகிறது. திரைக்கதை தடுமாற்றத்தை சரி செய்திருந்தால் சுவாரசியமான படமாக கலாட்டா கல்யாணம் அமைந்திருக்கும்.முழு படத்தையும் தனுஷ் தாங்கிப் பிடிக்கிறார். உணர்வுபூர்வமான பல காட்சிகள் அவருக்குப் படத்தில் உண்டு. இரண்டு முறை தேசிய விருது வாங்கியவர் என்பதை படம் முழுவதும் தனது நடிப்பு ஆளுமையால் நிரூபித்திருக்கிறார். தமிழ் இளைஞன் கதாபாத்திரம் என்பதால் அவருக்கு எளிதாக பொருந்திப்போகிறதுதமிழ் பதிப்பிற்கு தனுஷ் குரல் கொடுத்திருப்பதால் நேரடி தமிழ்ப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது
துரு துருகுமரிகதாபாத்திரத்தில் சாரா அலிகான். அவருடைய கதாபாத்திரத்தில் எந்த அளவிற்கு இளமைத் துள்ளலுடன் செய்ய முடியுமோ அந்த அளவிற்குச் செய்திருக்கிறார். இல்லாத அக்க்ஷய்குமார் கதாபாத்திரத்தை இருப்பது போல் உணரும் மனதளவில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம்.
அது மாயை என்பது தெரியாமல் அப்படியே இயல்பாய் நடித்திருக்கிறார்.
சிறப்புத் தோற்றம் என்றாலும் படம் முழுவதும் வரும் கதாபாத்திரமாக அக்க்ஷய்குமார் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவருடைய நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பில்லை என்றாலும் படத்திற்கு பலம் சேர்க்கிறார்.ஏஆர்.ரஹ்மான் இசையில் ‘சக்க சக்க சக்களத்தி’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது காரைக்குடி அரண்மனை போன்ற வீடுகளில் தமிழ் இயக்குனர்கள் கூட இவ்வளவு சிறப்பாக பாடல்களைப் படமாக்கியது இல்லை.
கலாட்டா கல்யாணம் – முதல் பாதியில் கலாட்டா..இரண்டாம் பாதியில் கலவரம்
- அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு -கே.எஸ்.அழகிரிநிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு […]
- மதுரை செல்லம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி போராட்டம்மதுரை செல்லம்பட்டி அருகே.பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை […]
- ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழாமதுரை மாவட்டம் தங்களாச்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப்ள்ளியில் ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழா நடைபெற்றது. […]
- ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்ன? எடப்பாடி பழனிசாமிஇன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெடில் அறிவிக்கப்பட்டரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை என எடப்பாடி […]
- சோழவந்தானில் பங்குனி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்புசோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ […]
- விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிஇன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் […]
- திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய மணமக்கள்..!கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் சிலம்பம் […]
- தஞ்சாவூரில் இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி..!தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறாக இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் […]
- நெல்லையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி..!நெல்லையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருநெல்வேலி மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் […]
- 8ம் வகுப்பு மாணவர் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சிராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் […]
- பேராபத்தை சந்திப்போம்-ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு பேச்சு!“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் […]
- மதுரை மெட்ரோ திட்டம்- எஸ்எம்எஸ் அனுப்பிய தமிழக அரசுமதுரை மக்களுக்கு 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக […]
- அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? மதுரை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி பேட்டி..மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே […]
- இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில்..
முதலிடம் பெற்றுத் திகழ்வது தமிழ்நாடுதான்..!இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை […] - லைஃப்ஸ்டைல்உடற்பருமனும் அதனைக் குறைக்கும் வழிகளும்: