தென் மாவட்டங்களில் ஒன்றிணைக்கும் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்ற மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அனைத்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக மதுரையில் பெய்து வந்த மழையினால் முதலாவது நடைமேடையில் உள்ள
மழைக்கு கட்டிட சிமெண்ட் மேற்பூச்சுக்கள் பெயர்ந்து திடீரென கீழே விழுந்தது. பயணிகள் அலறி அடித்து ஓடினர். நல்வாய்ப்பாக பயனிலுக்கு யாரும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. பலமுறை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்கும் முன் விபத்தை தடுக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என கோரிக்கை விடுத்தனர்.