• Tue. Oct 3rd, 2023

கள் விற்பனை செய்தவர்கள் கைது..!

Byவிஷா

Jun 7, 2023

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எஸ். மேலப்பட்டி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சுப்பிரமணி (வயது 26), மாரிசாமி (வயது 40) ஆகிய இருவரும் இரண்டு லிட்டர் கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. உடனே, அவர்களிடம் இருந்து கள்ளை பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *