• Sun. Mar 26th, 2023

அண்ணா நினைவு நாள்: முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி..!

Byவிஷா

Feb 3, 2023

பேரறிஞர் அண்ணாவின் 54வத நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினாவிலுள்ள அண்ணா நினைவிடம் நோக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது. அண்ணா நினைவிடம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணாவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா நினைவிடம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *