• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அன்புச்செழியன் வீட்டில் ரெய்டு -ரூ.10 கோடி சிக்கியது

ByA.Tamilselvan

Aug 3, 2022

பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற ரெய்டில் ரூ10 கோடி சிக்கியதாக தகவல்
பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல கலைப்புலி தாணு உள்ளிட்ட பல சினிமா பைனான்சியர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் நேற்று முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இது வரை ரூ.10கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 5 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை இன்று 2 வது நாளாக நீடித்து வருகிறது. கடந்த 2020 ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.