• Fri. Apr 19th, 2024

TNPSC தேர்வுகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

TNPSC நடத்தும் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்விற்கு இன்று முதல் மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது!

இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. கடந்த 18-ம் தேதி தேர்வுக்கான அறிவிப்பு தொடர்பாக சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், ” குரூப் 2 மற்றும் குரூப் 2 a தேர்வுகள் மே 21-ம் தேதி நடத்தப்படும். பிப்ரவரி 23-ம் தேதி முதல் மார்ச் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெறும்” எனத் தெரிவித்திருந்தார்.

அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் 2 மற்றும் 2 ஏ தேர்விற்கு இன்று முதல் மார்ச் 23 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் apply.tnpscexams.in, www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *