மதுரை மாநகராட்சி காலனி பகுதியில் தமிழக அருந்ததியர் முன்னேற்ற சங்கம் சார்பில் சட்டமேதை அம்பேத்கார் 133 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த விழா மதுரை மாநகராட்சி காலனி அம்பேத்கர் சிலை அருகே எஸ்.டி.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார்.ஒருங்கிணைப்பாளர் தமிழ்கனி வரவேற்புரை நிகழ்த்தினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து மாணவர் மாவட்ட செயலாளர் ரவிக்குமார் திராவிட மாமன்ற உறுப்பினர்கள் (92) கருப்பசாமி, இன்குலாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழவில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஓய்வு பெற்ற சார்பு ஆய்வளர் ராமர் பணியில் சிறந்த காவல் அதிகாரி என வழங்கப்பட்டது.மேலும் தமிழக அருந்ததியர் முன்னேற்ற சங்கம் சார்பில் மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.நன்றி உரையை தனுஜ் கூறினார்.