• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாநில மாநாடு நடத்த அ.தி.மு.க முடிவு

எம்.பி. தேர்தல் வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளை முழு வீச்சில் தொடங்குங்கள் என்று இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விரைவில் மிகப்பெரிய மாநில மாநாடு நடத்துவதற்கான ஒரு முடிவும் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எந்த இடத்தில்..? எந்த மாவட்டத்தில்..? இந்த மாவட்ட மாநாடு நடத்தப்பட்டு என்ற முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. ஆனாலும் விரைவில் மாநில மாநாடு நடத்துவதற்கு ஒரு திட்டமிடல் என்பது செய்யப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. எம்.பி தேர்தல் மற்றும் அதேபோல தமிழக அரசை கண்டிக்கும் விதமாக இந்த மாநாட்டில் தீர்மானங்கள் இடம்பெறும் என்று தகவல் தற்போது வெளியாகி உள்ளது. எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.