• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அமைச்சரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த நடிகை…

Byகாயத்ரி

May 18, 2022

திமுக அமைச்சர் பொன்முடிக்கு நடிகை யாஷிகா இன்ஸ்டாகிராமில் பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். திமுக அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ‘இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள், இங்கு பானிபூரி விற்பவர்கள் யார்?’ என்று சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு பலரும் பலவித பதில்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை யாஷிகா’ ஒருவருடைய மொழிக்கும், வேலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அனைவருமே பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள். பானிபூரி விற்பவர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல, கிண்டல் செய்யாதீர்கள்’ என்று எச்சரித்திருந்தார்.