

உதவி இயக்குனரை சாதி பெயரை சொல்லி திட்டிய சர்ச்சையில் சிக்கிய நடிகர் விக்னேஷ், தற்போது பகிரங்கமாக தன்னுடைய மன்னிப்பை கேட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘சின்னதாய்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்னேஷ். இந்த படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து ‘கிழக்குச் சீமையிலே’, ‘உழவன்’, ‘பசும்பொன்’, உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். சமீப காலமாக இவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில், சீரியல் பக்கம் சாய்ந்தார். அதே போல் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி, பாஜக கட்சியின் கலை இலக்கிய பொறுப்பாளராகவும் விக்னேஷ், சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் உதவி இயக்குனர் சுபாஷ் என்பர், தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தை விக்னேஷிடம் கேட்ட போது, அவரை மிரட்டுவது போல் பேசியது மட்டும் இன்றி, சாதியின் பெயரை சொல்லி விக்னேஷ் திட்டியது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் உதவி இயக்குனரை மிகவும் மோசமாக திட்டி இருந்தார் விக்னேஷ்.
இதன் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே விக்னேஷ் இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டரில் கூறி இருந்தார். மேலும் பல படங்களில் நாயகனாக, துணை கதாபாத்திரங்களாக நடித்தவர் இப்போது எந்த படங்களும் இல்லாததால் ஏனோ, வணிகம் செய்கிறார் போல. எவ்வளவு சாதி வெறியோடு பேசுகிறார் பாருங்கள். தமிழ்நாடு காவல்துறை இவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இவரை கைது செய்ய வேண்டும் என காவல்துறையினருக்கும், இதனை டேப் செய்திருந்தார்.
வன்னியரசுவின் பதிவு பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், நடிகரும் – பாஜக பிரமுகருமான விக்னேஷ் வன்னியரசுவை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி, உதவி இயக்குனர் சுபாஷ் விஷயத்தில் தான் நடந்து கொண்டது தவறு தான் என்பதை உணர்ந்து, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த விவகாரம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர்களுக்கு விபத்து..,குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி … Read more
- ஒன்றிய, கர்நாடகா அரசுகளை கண்டித்து, நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்…குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்.நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள … Read more
- நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்…மதுரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை … Read more
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம். அதை சுதர்சனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான்.அந்த அரசன் சகல … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 261: அருளிலர் வாழி தோழி! மின்னு வசிபுஇருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடுவெஞ் … Read more
- குறள் 538:புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். பொருள் (மு.வ): சான்றோர் புகழ்ந்து சொல்லியச் … Read more
- பிஜேபியுடன் கூட்டணி முறிவு… அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்சசியை வெளிப்படுத்திய இஸ்லாமியர்கள்..,பி.ஜே.பியுடன் கூட்டணி முறித்துக் கொண்டதற்காக சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இஸ்லாமியர்கள் இனிப்பு ஊட்டி … Read more
- வாடிப்பட்டி அருகே மத்திய சிறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மறியல்..!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளாக சிறுமலை அடிவாரத்தில் உள்ள … Read more
- கழிவுநீரை அகற்ற லஞ்சம் கேட்ட மாநகரட்சி அதிகாரி கைது..!தொடர்ந்து இதுகுறித்து பொன்னகரம் வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர் விஜயகுமார் கணேசன் … Read more
- சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985)…சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் … Read more
- குளச்சல் படகு மூழ்கி மூன்று குமரி மீனவர்கள் மாயம்..!மீனவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆள் கடல் பகுதியில் 29. 9. 2023 அன்று மீன் … Read more
- விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருள் கண்காட்சி..!விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவின் உற்பத்திப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகிறதுவிழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி … Read more
- அக்.1 முதல் விருதுநகர் – தென்காசி இடையே மின்சார ரயிலில் பயணிக்கலாம்..!
- தொடர் விடுமுறையால் திருப்பதியில் அலைமோதிய கூட்டம்..!தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது.இதனால் வைகுந்தம் … Read more
