• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

போலீசார்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..,

ByB. Sakthivel

Oct 10, 2025

மத்திய அரசின் கட்டுப்பாட்டு உள்ள புதுச்சேரி மாநிலத்தில் 51 மொழி பேசக்கூடிய 198 நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்கிறார்கள், பல்வேறு கொடுத்த சம்பவங்களும் நடந்து வருகிறது அந்த வகையில் மத்திய பல்கலைக்கழக மாணவியிடம் அத்திமீறி நடந்து கொண்ட பேராசிரியர் மீது நடவடி எடுக்க கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

பாலியல் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய துணைவேந்தர் நடவடிக்கை எடுக்காமல் போராட்டம் நடத்திய மாணவர்களை மீது தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மாணவர்கள் போராட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டியது அரசின் கடமை இதில் புதுச்சேரி துணை ஆளுநர், முதலமைச்சர், கல்வித்துறை அமைச்சர் ,சட்ட துறை அமைச்சர், ஆகியோர் தலையிட்டு மாணவர்களை அழைத்து பேசி போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் என வலியுறுத்திய சாய் சரவணன் குமார்,…

மாணவர்களை தாக்கிய போலீசார் மீதும் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்து விசாரணை கமிஷன் அமைத்து மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சாய் சரவணன் குறித்து முதலமைச்சர் தெரிவித்த பதில் குறித்து கேள்வி எழுப்பியதற்கு…

எந்த பிரச்சனைக்குமே வாய் திறக்காத முதலமைச்சர் சாய் சரவணன் பிரச்சனைக்கு வாய் திறந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்த அவர் ஊசுடு தொகுதியில் முதலமைச்சர் தலைமையில் 28 பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்றுள்ளது, மக்களுக்கு விரோத மான திட்டங்கள் கொண்டு வரும்போது அதை எதிர்த்தால் அந்த திட்டங்களை கைவிட்ட முதலமைச்சர் தான் நமது முதலமைச்சர் அவர் என்னை பற்றி பேசுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்று தெரிவித்தார்,

ஆதி திராவிட நலத்துறையில் இயக்குனராக இருந்த இளங்கோவன் பணியில் இருந்து மாற்றப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக காத்திருப்போர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளார் இது எதனால் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.