அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் தேதியன்று பிரபாஸ் நடித்திருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படம் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. இதன் மூலம் ‘ஆதி புருஷ்’ தனது உலகளாவிய அரங்கேற்றத்தை தொடங்குகிறது.
இயக்குநர் ஓம் ராவத்- தயாரிப்பாளர் பூஷன் குமார் -நட்சத்திர நடிகர் பிரபாஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’, டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்படுவதன் மூலம் இந்திய சினிமா, உலக அரங்கில் தன்னுடைய அடுத்த கட்ட முன்னகர்வை முன்னெடுத்திருக்கிறது.
பிரம்மாண்டமான படைப்பாக தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ விரைவில் வெளியாகவிருக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குநரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மாபெரும் காவியமாக கருதப்படும் ராமாயணத்தை தழுவி உருவாகி இருக்கிறது. இதனைக் காண ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரித்திருக்கும் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மகத்துவத்தைக் கொண்ட ‘ஆதி புருஷ்’ படத்தை, புலம்பெயர்ந்த இந்தியர்கள் மட்டுமல்லாமல் உலகமே காணவிருக்கிறது என டிரிபெகா சர்வதேச திரைப்பட விழா குழு அறிவித்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள நியுயார்க் எனும் நகரில் ஜூன் 7ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் 22 ஆவது டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் உலகளாவிய பிரத்தியேக காட்சி திரையிடப்படுகிறது. ‘ஆதி புருஷ்’ திரைப்படம் ஜூன் 16ஆம் தேதி முதல் இந்தியாவிலும், உலகளவிலும் வெளியாகிறது.

அண்மையில் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவிற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது. அதில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தினை உலகளாவிய பிரத்யேக காட்சியாக திரையிட நடுவர் குழு தேர்வு செய்திருக்கிறது. 2001 ஆம் ஆண்டில் ஹாலிவுட்டின் நட்சத்திர நடிகர்களான ராபர்ட் டி நீரோ, ஜேன் ரோசென்டல் மற்றும் கிரேக் ஹாட்காஃப் ஆகியோரால் OKX நிறுவப்பட்டது. இதன் சார்பாக நடைபெறும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் கலைஞர்கள் மற்றும் பலதரப்பட்ட பார்வையாளர்களை ஒன்றிணைத்து, கதை சொல்லல் மற்றும் திரைப்படத்தின் அனைத்து வடிவங்களையும் கொண்டாடுகிறது. திரைத்துறையின் வலுவான வேர்களைக் கொண்டிருப்பதால், இந்த விழாவில் இடம்பெறும் படைப்புகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் தரமான பொழுதுபோக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. காட்சி விருந்தாக அமைந்திருக்கிறது என கருதப்படும் ‘ஆதி புருஷ்’, முப்பரிமாண வடிவில் இரவு நேர பிரத்யேக காட்சியாக இந்த விழாவில் திரையிடப்படுகிறது. இதன் மூலம் ‘ஆதி புருஷ்’ உலகத்தை தனதாக்குகிறார். இது இந்திய சினிமாவிற்கு ஏற்ற நல்ல தருணமாக கருதப்படுகிறது.
இந்த அற்புதமான சாதனை குறித்து இயக்குநர் ஓம் ராவத் பேசுகையில், ” ஆதி புருஷ் ஒரு படம் அல்ல. இது ஒரு உணர்ச்சி. ஒரு உணர்வு !. இந்தியாவின் உணர்வை எதிரொலிக்கும் கதையைப் பற்றிய எங்களது பார்வை. உலகின் மதிப்பு மிக்க சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றான டிரிபெகா நடுவர் குழுவால் ‘ஆதி புருஷ்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்தபோது… ஒரு மாணவனாகவே எப்போதும் இருக்க விரும்புகிறேன். டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக திரையிடல், எனக்கும் என்னுடைய ஒட்டுமொத்த குழுவிற்கும் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் நமது கலாச்சாரத்தின் மிகவும் வேரூன்றிய ஒரு கதையை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறோம். இந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ஆதி புருஷை கண்டு ரசிக்கும் பார்வையாளர்களின் எதிர்வினையைக் காண்பதற்கு உற்சாகமாக காத்திருக்கிறோம்” என்றார்.
இது தொடர்பாக டி சிரீஸின் தயாரிப்பாளர் பூஷன் குமார் பேசுகையில், ” இந்திய சினிமாவை சர்வதேச அளவிற்கு எடுத்துச் செல்வது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம். டிரிபெகா சர்வதேச திரைப்பட விழா- உலகளவில் மதிப்புமிக்க பாராட்டப்படும் தளங்களில் ஒன்று. இங்கே திரையிடுவதற்கு எங்களுடைய ‘ஆதி புருஷ்’ தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு கடும் உழைப்பு மட்டுமல்ல.. இந்திய வரலாற்றின் சித்தரிப்பு இங்கே காட்சிப்படுத்தப்படுகிறது. இது உற்சாகமான தருணங்கள். ஆதி புருஷ் அனைவருக்கும் ஒரு அற்புதமான காட்சி விருந்தாக அமையும். மேலும் இது உலகளாவிய பார்வையாளர்களை மயக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.
இது தொடர்பாக நடிகர் பிரபாஸ் கூறுகையில், ” நியூயார்க்கில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஆதி புருஷின் உலகளாவிய பிரத்யேக காட்சியை காண்பதில் பெருமிதம் அடைகிறேன். நமது தேசத்தின் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் திட்டத்தில் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். நமது இந்திய திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை பொருத்தவரை ஆதி புருஷ் சர்வதேச அளவிலான அரங்குகளை சென்றடைந்ததை …ஒரு நடிகனாக மட்டுமின்றி, ஒரு இந்தியனாகவும் என்னை பெருமிதம் கொள்ள வைக்கிறது. டிரிபெகாவில் பார்வையாளர்களின் வரவேற்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
‘ஆதி புருஷ்’ திரைப்படத்தில் பிரபாஸ் கிருத்தி சனோன் ஸன்னி சிங் சயீஃப் அலி கான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை டி சிரீஸ் பூசன் குமார் மற்றும் கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

டிரிபெகா சர்வதேச திரைப்பட விழா குறித்து….
OKX வழங்கும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழா – திரைப்படங்கள், தொலைக்காட்சி, இசை, ஒலி வழியாக கதை சொல்லல், விளையாட்டு மற்றும் XR உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் கதை சொல்வதை கொண்டாட… கலைஞர்கள் மற்றும் பலதரப்பட்ட பார்வையாளர்களை ஒன்றிணைக்கிறது. திரைப்படத் துறையின் வலுவான வேர்களைக் கொண்டுள்ள டிரிபெகா படைப்பு வெளிபாடு மற்றும் பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் அளிக்கிறது. டிரிபெகா- வளர்ந்து வரும் மற்றும் விருது பெற்ற திறமையாளர்களை கண்டறிதல், புதுமையான அனுபவங்களையும் கண்டறிதல், பிரத்தியேக பிரிமீயர்ஸ், கண்காட்சிகள், உரையாடல்கள், நிபுணர்களின் விவாதங்கள், நேரலைகள் போன்ற வடிவங்களின் மூலம் புதிய திட்டங்களை… ஆலோசனைகளை.. அறிமுகப்படுத்துகிறது. உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மன்ஹட்டன் நகரில் பொருளாதார மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை தூண்டுவதற்காக 2001 ஆம் ஆண்டில் ஹாலிவுட் நட்சத்திரங்களான ராபர்ட் டி நீரோ, ஜேன் ரோசென்டல் மற்றும் கிரேட் ஹாட்காஃப் ஆகியோரால் இந்த விழா அமைப்பு நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழா, அதன் 22 ஆவது ஆண்டு விழாவினை ஜூன் ஏழாம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நியூயார்க் நகரில் கொண்டாடுகிறது. 2019 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் முர்டோக்கின் ‘லூபா சிஸ்டம்ஸ்’, டிரிபெகா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கி, ரோசெண்டல், டி நீரோ மற்றும் முர்டோக் ஆகியோரை ஒன்றிணைத்து நிறுவனத்தை வளர்ச்சி அடைய செய்துள்ளது.
- முடி சூட்டும் விழா முடிந்தது.. மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.. ராகுல் காந்திமல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்பாஜக […]
- செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது -முதல்வர் மு .க ஸ்டாலின்.மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. என […]
- பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த […]
- புது நாடாளுமன்றம் திறக்கும் நாளில் நிலநடுக்கத்தால் குலுங்கிய தலைநகர் டெல்லிவரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இன்று டெல்லி […]
- ரூ.75 நாணயம் கருப்பு நிறமாக இருப்பது ஏன்?இந்திய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு […]
- முதல் நாளே பிரச்சனை-புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் கைது
- உலகபட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 1000 பேருக்கு மதிய உணவுஉலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு […]
- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!..வெயில் படிப்படியாக குறையும்தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக […]
- மருத்துவகல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து-தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்மருத்துவக்கல்லூரிக்கான அங்கீராரம் ரத்து செய்யப்பட தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கே காரணம் என […]
- பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா ரத்து -ஏற்புடையதல்ல! – எஸ்.டி.பி.ஐ.மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல! – […]
- 2023 ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு..கோப்பையை வெல்லுமா சென்னை அணி?ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று இரவு மோதுகின்னறன. இன்றுடன் 2023 ஐபிஎல் […]
- மதுரையில் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்குமதுரை பாண்டிகோவில் பகுதியில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்கு- […]
- ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் – மரக்காணம் கள்ளச்சாராய […]
- இன்று இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள்பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் […]
- கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழாகலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு […]