• Wed. Sep 27th, 2023

லட்சியத்துக்காக இரவில் தினமும் 10 கி.மீ ஓடும் இளைஞன்

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் மெஹ்ரா(19) எனும் இளைஞன் பரோலாவில் தனது சகோதரருடன் வசித்து வருகிறார்.
நொய்டாவின் செக்டார் 16-ல் பணிபுரியும் இவர், தினமும் வேலையை முடித்துவிட்டு, 10 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தனது வீட்டுக்கு ஓடுயே செல்கிறார். இப்படியே நாளும் போக, நேற்றும் இதே போல் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு ஓடிக்கொண்டிருக்கையில், பிரபல எழுத்தாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான வினோத் காப்ரி அவர் பார்த்திருக்கிறார். சாலையில் அவரை பார்க்க, காரில் ஏறிக்கொள்ளும்படி வினோத் காப்ரி கேட்டும் தனது லட்சியத்திற்காக வேணாம் என கூறிய உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *