• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் அருகே சிறப்பு சார்பு ஆய்வாளர் விபத்தில் பலி.

ByKalamegam Viswanathan

Jan 20, 2024

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு வாசிமலை (வயது 51 ) காங்கேய நத்தம் கிராமத்தில் , தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் .
பணி முடிந்து காலை வீட்டில் இருந்து கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது , எதிரே வந்த டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்தில் வாசிமலை தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உயிரிழந்தார். இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர். இவ்விபத்து குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.