• Tue. Apr 30th, 2024

வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருக்கும் போராட்டம்

ByKalamegam Viswanathan

Feb 12, 2024

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பட்டி ஊராட்சியில் வீடு இல்லாத மக்களுக்கு வீட்டடி மனை கேட்டு மனு கொடுத்தும் விசாரணை செய்தும் பட்டா கிடைக்காததால் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பாக காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில குழு பொன்னுத்தாய் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உமா மகேஸ்வரன், ஒன்றிய செயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர் பஞ்சாட்சரம், கிளைச் செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் கொண்டையம்பட்டி ஊராட்சியில் வீட்டு மனை கேட்டு மனு செய்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *