• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நடிகர்கள் சங்கம் சார்பாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி..,

ByKalamegam Viswanathan

Sep 28, 2025

கரூரில் பிரச்சார கூட்டத்தில் “உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி” மதுரை மாவட்டம் தென்னிந்திய நடிகர் சங்கம் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் மீசை அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா மற்றும் நடிகர்கள், நடிகைகள், குழந்தை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.