தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னாள் கூட்டமைப்பின் தலைவர் சங்குபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராதா அவர்களின் மறைவுக்கு இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் பணி வருகின்ற 18ஆம் தேதி நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது. இதில் குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.