• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

அண்டாவுக்குள் புகுந்த ஐந்தடி நீளமுள்ள பாம்பு கடித்து ஒருவர் காயம்..,

ByS.Ariyanayagam

Feb 28, 2026

அண்டாவுக்குள் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பு தீண்டியதில் ஒருவர் காயமடைந்தார்.

கோபால்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சி தி.பள்ளபட்டியில் சுப்பம்மாள் என்பவரின் வீட்டில் 5 அடி நீள சாரை பாம்பு அண்டாவுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டது.

தகவல் அறிந்து வந்த நத்தம் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.

பாம்பு தீண்டியதில் ராசு என்பவர் காயமடைந்து கோபால்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.