மதுரை பைபாஸ் சாலை பகுதியில் கார் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து: 5 கார்கள் எரிந்து சேதம், தீயணைப்பு போலீசார் விரைந்து வந்து மீட்பு குழுவினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீனை கட்டுக்குள் வந்தனர்.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள முத்துப்பாண்டி தெரு பகுதியில் கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருபவர் பாஸ்கர். இந்த கார் ஒர்க் ஷாப்பில் இன்று மதியம் திடீரென தீ பற்றி எரிய துவங்கியது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.திடீர் நகர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென பற்றி எரியத் துவங்கியது. அருகில் இருந்த கேஸ் வெல்டிங் வைக்கும் சிலிண்டரில் தீ பரவி வெடித்து சிதறியது. இதில் ஐந்து கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

கேஸ் வெடித்ததில் தகர செட்டுகள் சுமார் 20 அடி தூரம் பறந்து அருகே உள்ள மரத்தில் தொங்கியபடி இருந்தது. மதுரை டவுன் தீயணைப்பு நிலைய மோட்டார் வாகன நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் 20க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் .மேலும் மாநகராட்சி குடிநீர் வாகனமும் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் மூன்று மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் சம்பவம் அறிந்த மதுரை மாவட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு மாவட்ட அலுவலர் வினோத் மற்றும் துணை அலுவலர் பாண்டி ஆகியோர் சம்பவம் குறித்து நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.இந்த திடீர் தீ விபத்தினால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த தீ விபத்து குறித்து எஸ் எஸ் காலனி காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]