• Mon. Apr 29th, 2024

மதுரை நேரு நகர் பிரதான சந்திப்பில் போக்குவரத்தை சரி செய்ததாக கூறி, போக்குவரத்து நெரிசலை உருவாக்கிய போதை ஆசாமி

ByKalamegam Viswanathan

Jan 23, 2024

மதுரை நேரு நகர் பிரதான சந்திப்பில் இன்று மதியம் போதை ஆசாமி ஒருவர், மதுரை பைபாஸ் ரோடு போடி லைன் மேம்பாலம் பகுதியில் போக்குவரத்தை சரி செய்வதாக கூறி, போதையில் தள்ளாடி கொண்டு அங்குமிங்குமாக ஓடிக்கொண்டு போக்குவரத்தை சரி செய்வதாக அலங்கோல படுத்திக் கொண்டு வந்துள்ளார். இதனால் அரை மணி நேரத்துக்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தலையிட்டு போதை ஆசாமியை அப்புறப்படுத்தியதால் போக்குவரத்து சீரானது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *